எண்ணூரில் கமல்ஹாசன் பார்வையிட்டதில் மக்கள் நலன் இல்லை- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிரடி
எண்ணூரில் நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டதில் மக்கள் நலன் இல்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை: எண்ணூரில் நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டதில் மக்கள் நலன் இல்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் துறைமுகப் பகுதியில் நேற்று காலை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த மக்களிடமும் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

கமலின் இந்த அதிரடிக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்பி உதயக்குமார் நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் துறைமுகத்தில் பார்வையிட்டது சொந்த நலனுக்காகத்தான் என்றார்.
அவர் எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்டதில் எந்த மக்கள் நலனும் இல்லை என்றும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறினார். மேலும் வதந்திகளை கிளப்பிட கமல் முயற்சி செய்வதாகவும் கூறிய ஆர்பி உதயக்குமார், அவரது கனவு பலிக்காது என்றும் கூறினார்.
நிலவேம்பு கசாயம் விவகாரத்தில் கமல் கூறியது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் தினகரன் கூறியது எதுவுமே இதுவரை நடக்கவில்லை என்றும் ஆர்பி உதயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications