நாட்டை பார்க்கதான் நாங்க இருக்கோமே.. நடிகர்கள் வந்து என்ன பண்ணப் போறீங்க? அமைச்சர் கேள்வி!!
நாட்டை பார்க்க நாங்கள் இருக்கும் போது நடிகர்கள் வந்து என்ன செய்யயப்போகிறார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: நாட்டை பார்க்க நாங்கள் இருக்கும் போது நடிகர்கள் வந்து என்ன செய்யயப்போகிறார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. விழாவில் பேசிய விஜய் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்க்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். ப
சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என தெரிவித்தார்.

முயற்சி பலிக்கவில்லை
இந்நிலையில் நடிகர் விஜயின் பேச்சுக்கு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் எப்போது அரசியலில் குதிக்கலாம் என காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. விஜய் அரசியலில் குதிக்க அவரது தந்தை வலையெல்லாம் கட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

எம்ஜிஆராக நினைக்கிறார்
ஆனால் விஜய்க்கு அரசியலில் குதிக்க பயம். தைரியம் இருந்தால் விஜய் அரசியலில் குதித்து அடிபடாமல் தப்பித்தால் அவர் சமத்து. இரண்டு ரசிகர்கள் ஆதரவாக பேசியதால் விஜய் தன்னை எம்ஜிஆர் போல் எண்ணிக்கொண்டிருக்கிறார்.

நாட்டை நாங்கள் பார்க்கிறோம்
புரட்சித்லைவர் எம்ஜிஆருக்கு இணையாக இந்த நாட்டில் யாரும் இல்லை. சினிமாவில் வேஷம் போடுவதுதான் உங்கள் வேலை. அதனை சரியாக செய்யுங்கள். நாட்டை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்.

வேஷம் கட்டலாம்
மக்கள் உங்களிடம் சொன்னார்களா, விஜய் சார் நாட்டில் எதுவுமே சரியில்லை நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று? முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்கிறார். முதல்வராக வேஷம் கட்டலாம். அதை மக்கள் ரசிப்பார்கள்.

தூக்கம் இல்லை
முதல்வராக செயல்படுவது சாதாரண காரியமல்ல. எங்களுக்கு சாப்பாடும் இல்லை தூக்கமும் இல்லை. எப்போதும் மக்கள் பணிதான்.

மனிதர் அல்ல புனிதர்
நீங்கள் ஒரு மணி நேரம் டயலாக் பேசி விட்டு 3 மணி நேரம் கேரவனில் தூங்குவீர்கள். எம்ஜிஆர் என்ன செய்தார் என நீங்கள் கேட்கலாம், எம்ஜிஆர் மனிதர் அல்ல புனிதர். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications