"தொல்லை தராங்க".. சேகர் பாபு மகள் என்னிடம்தான் உதவி கேட்டு வந்தார்.. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை
சென்னை: அண்ணன் சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டு வந்தார், குடும்ப விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த திருமணத்தை சேகர் பாபு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு அமைச்சர் சேகர் பாபு எதிர்ப்பு என மகள் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். பழைய வழக்கு ஒன்றில் சதீஷ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், ஒரு முக்கியமான விஷயத்தை நான் பேச வேண்டும். அண்ணன் சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டு வந்தார்,. முதலில் என்னிடம்தான் உதவி கேட்டு வந்தார். குடும்ப விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டோம். இது உங்கள் குடும்ப விஷயம், இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை.
உங்கள் தந்தை, பெரியவர்களை வைத்து பேசி சரி செய்யுங்கள். இல்லையென்றால் கோர்ட்டுக்கு செல்லுங்கள். நீதித்துறை சிறப்பாக உள்ளது. அதனால் கோர்ட்டில் அணுகுங்கள். அரசியல் ரீதியாக குடும்ப விஷயங்கள் பற்றி நாங்கள் பேசி அரசியல் செய்ய விரும்பவில்லை. நான் இப்போதும் கூட அதை பற்றி பேச நினைக்கவில்லை.
ஆனால் அந்த இளைஞரை தொல்லை செய்கிறார்கள். அது ஒரு குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் இதில் போலீசை வைத்து பிரஷர் கொடுக்கிறார்கள். வாரண்ட் போட்டு தொல்லை கொடுக்கிறார்கள். அந்த பெண்ணிற்கு மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள்.
இதை எல்லாம் சும்மா விடக்கூடாது. பழைய எதோ புகாரை எல்லாம் எடுத்து வந்து வழக்கு போடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு டிஜிபிக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். சட்டப்படிதான் செயல்பட வேண்டுமே தவிர, காழ்ப்புணர்ச்சி காரணமாக செயல்பட கூடாது.

இது குடும்ப விஷயம். இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இதில் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி ஒரே நபர் மீது மாறி மாறி அரசு அதிகாரத்தை ஏவி விடுவீர்கள் என்றால் அது மிகப்பெரிய தவறு. இதில் அதிகார துஷ்பிரயோகம் செய்ய கூடாது.
முதல்வர் ஸ்டாலின் இதில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், பல கோர்ட்டுகளில் திமுகவினர் எனக்கு எதிராக அவதூறு வழக்கு போட்டுள்ளனர். 1461 கோடி ரூபாய்க்கு என் மீது வழக்கு போட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இப்படி நடந்ததே இல்லை. இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.
திமுக பைல்ஸ் பார்ட் 2 ஜூலை மாதம் வரும். நீங்கள் அவதூறு வழக்கு போடுவதால் நாங்கள் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.
இந்த முறை புதிய அமைச்சர்கள் மீது புகார்கள் வைக்கப்படும். விரைவில் பார்ட் 2 வரப்போகிறது. அப்போது பல உண்மைகள் வரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications