அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா - அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம்!
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜூ என சசிகலாவை புகழ்ந்துள்ளார்.
சென்னை: அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.
அதிமுக அம்மா அணி பொது செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 5 நாட்களில் பரோலில் வந்துள்ளார். அவரை அரசியல்ரீதியாக யாரும் சந்திக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை சிறைத்துறை நிர்வாகம் விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டுடன் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் கணவர் நடராஜனை சென்று சந்தித்து வருகிறார்.
இன்றைய அரசியல் சூழலில், பரோலில் வெளியே வந்த சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்கக் கூடும் என்று பல அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால் இதுவரை யாரும் சந்திக்கவில்லை. இந்நிலையில் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா என புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆனால் என்னுடைய விருப்பு வெறுப்புகளை அடக்கிக்கொண்டு ஜெயலலிதாவின் பிள்ளையாக இருக்கிறேன் என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றைய சூழ்நிலையில் என் கருத்துகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் பாதகமாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.