நீட் பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்து... தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்
பள்ளி நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பள்ளி நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தமிழக சட்டசபையில் நடைபெற்றது. அப்போது செங்கோட்டையன் கூறுகையில்
பள்ளி வேலை நாளில் நீட் பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

விடுமுறை நாட்களிலோ, பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகோ நீட் பயிற்சி அளிக்கலாம். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 3 வருடங்களுக்கு ஒருமுறை தமிழக அரசிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications