சர்ச்சைக்குரிய பேட்டி.. காங். தலைவர் இளங்கோவன் மீது அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு
சென்னை: அதிகாரி மரணத்தில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில், மாநகர அரசு வக்கீல் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: கடந்த மார்ச் 23ம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில், அதிகாரி மரணத்தில் அமைச்சருக்கு தொடர்பு என்று கூறியுள்ளார். அவர் தெரிவித்த கருத்து ஆதாரமற்றது. இதனால், பொதுமக்கள் மத்தியில் அமைச்சருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.