விஜயபாஸ்கருக்கு நேரம் சரியில்லை... அவர் மூலம்தான் சேகர் ரெட்டியுடன் கரம் கோர்த்தாராம் பிரேம்!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் கூட்டாளி பிரேம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் அறிமுகமானவர் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி போயஸ்கார்டன் வீட்டிற்கு நெருக்கமானவர். அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோர் வீடுகளில் கடந்த 7ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக் கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 24 நாட்களில் இவர்கள் மாற்றியுள்ளது தெரியவந்தது.
சேகர் ரெட்டி வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வங்கி அதிகாரிகளின் துணையுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 409, 420 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(2), 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சேகர் ரெட்டி கைது
சேகர் ரெட்டி. அவரது நண்பர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டியும் அவரது நண்பர் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 4 வரை சிறை
இந்த நிலையில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரை இன்று சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். பிரேம், ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரையும் ஜனவரி 4ம் தேதிவரை சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேகர் ரெட்டியின் நண்பர்கள்
கைது செய்யப்பட்ட 3 பேரில் பிரேம் என்பவர் சேகர் ரெட்டியின் நீண்டகால நண்பர் ஆவார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சேகர் ரெட்டிக்கு பிரேம் அறிமுகமானவர். பிடிபட்டுள்ள மற்றொரு நபர் திண்டுக்கல் மணல் வியாபாரி ரத்தினம் ஆவார். 3வது ஆள் மணல் வியாபாரி புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆவார்.
ரத்தினம், சேகர் ரெட்டி, புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து மணல் வியாபாரம் செய்து வந்தனர்.

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், சேகர் ரெட்டிக்கும் நீண்ட கால நட்பு உண்டு. இந்த நட்பின் அடிப்படையிலேயே பிரேமுடன் நட்பான சேகர் ரெட்டி தொழில் கூட்டாளியாகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது சேகர் ரெட்டியுடன் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை இதோடு நிற்குமா, அல்லது அமைச்சர்கள் வரை நீளுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications