அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க கோரும் வழக்கு- சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி உத்தரவு!
மதுரை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் அவரது துறைகள் அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. மேலும் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடிப்பார் எனவும் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. ஆனால் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க ஆளுநர் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால்தான் அமைச்சர் பதவியை இழக்க முடியும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 2021-ல் கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் செந்தில் பாலாஜி. மின்சாரம், கலால் ஆயத்தீர்வை அமைச்சராகவும் இருந்தார். தற்போது முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது பண மோசடி செய்தது, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது அமைச்சரவை இலாகாக்கள் 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆகையால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி உள்ளார்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கும மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதே கோரிக்கையுடனான மனு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் நிலுவையில் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications