வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு புழு நெளியும் அரிசி.. அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு
கடலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய நிவாரண அரிசியில் புழுக்கள் நெளிவதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, கடந்த 9ம் தேதி கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக

கடலூர் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
கனமழைக்கு கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. கால்நடைகள் ஆங்காங்கே செத்து மிதக்கின்றன. ஏராளமான சடலங்களும் ஆங்காங்கே கிடப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். பேரிடர் மீட்புப்பணியினரும் கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை முடுக்கி விடுவதற்காக நேற்று தலைமை செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை கூட்டம் நடத்தினார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஏ.ஜெயபால், ஆர்.வி.உதயகுமார் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோரை கடலூருக்கு அனுப்பி வைத்தார்.
வியாழக்கிழமையன்று அமைச்சர்கள் குழு கடலூர் வந்து, மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கெடிலம் ஆற்று நீர் உள்ளே புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புருஷோத்தமன் நகர் பகுதி மக்கள் தங்கியுள்ள கே.என்.சி கல்லூரியில் சந்தித்த அமைச்சர்கள் ஆறுதல் கூறினார்கள்.
பின்னர், அமைச்சர் குழுவின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி பைகளையும், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார். அதை வாங்கிய பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து, அந்த அரிசி பையை திறந்து பார்த்தபோது, அரிசிக்குள் ஏராளமான புழுக்கள் இருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், "இது எங்களுக்கு எதுக்கு? தேவையில்லை நீங்களே எடுத்து கொண்டு போங்க என்று கட்சிக்காரர்களிடம் அரிசி பைகளை திருப்பி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் அதிமுகவினருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி உணவின்றி தவிக்கும் மக்களுக்கு புழுக்கள் இருந்த அரிசி கொடுத்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications