அமைச்சர் மகன் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலி… ரூ.3 லட்சம் பேரம் பேசியதால் உறவினர்கள் கொதிப்பு
திருச்சி: தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சுப்ரமணியனின் மகன் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் இறந்தவரின் குடும்பந்தினரிடம் மூன்று லட்சம் ரூபாய் வரை அமைச்சர் பேரம் பேசியதால் அவர்கள் கொதிப்படைந்தனர்..
இதில் ராம்குமாருக்கும் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விபரம் அறிந்த அமைச்சர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ராஜேந்திரன் குடும்பந்தினரிடம் மூன்று லட்சம் ரூபாய் வரை பேரம் பேசியிருக்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை என கூறப்படுகிறது.
அமைச்சரே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சமரசம் பேசி இருப்பதால் காவல் துறையினரும் வழக்கு பதியாமல் இழுத்தடித்திருக்கின்றனர். இதனால் இறந்த ராஜேந்திரனின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.