தாயில்லா பிள்ளைகளாகிய எங்களை வீழ்த்த பார்க்கிறார்களே... மதுரையில் ‘செல்லூரார்’ ஒப்பாரி
தாயில்லா பிள்ளைகளாகிய தங்களை வீழ்த்த பார்க்கிறார்களே என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்தார்.
மதுரை: தாயில்லா பிள்ளைகளாகிய அதிமுகவினரை வீழ்த்த பார்க்கிறார்களே என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற அமைதி பேரணியின் முடிவில் செல்லூர் ராஜூ பேசியதாவது:

திமுகவுடன் இன்று கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் இந்த கட்சிகள்தான் திமுகவை கடுமையாக விமர்சிக்கவும் செய்தன.
நடிகர் விஷால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். எங்களை எதிர்க்கும் வல்லமை திமுகவுக்குதான் உண்டு.
தாயில்லாத பிள்ளைகளாக இருக்கும் எங்களை வீழ்த்த பலரும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. ஆஅர்.கே.நகர் தொகுதியில் நாங்கள்தான் வெல்வோம்.
நாங்கள் மக்களோடு மக்களாக நின்று குறைகளைக் கேட்பவர்கள். ஆனால் மாடியில் நின்று கொண்டு மக்களைப் பார்த்து பேசுகிறவர் தினகரன்.
இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.












Click it and Unblock the Notifications