Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாக தூர்வாரப்பட்ட திருச்செந்தூர் உண்டியல்.. அதன் அடியில் இருந்த அதிசயம்.. வியந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: உண்டியலின் அடிமட்டத்தில் புழுதிக்குள் வந்த புதிரான காசுகள், திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிகளில் குவிந்த பணம்.. அள்ள அள்ள தங்கம்.. கொட்ட கொட்ட வெள்ளி.. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இவ்வளவு பணமா என்கிற அளவிற்கு 2.93 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். இந்த சூழலில் மத்திய அரசு அறிவித்த 2000 ரூபாய் செல்லும் காலம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி முன்கூட்டியே தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

Miracle in Thiruchendur murugan temple undiyal : Devotees were amazed

அந்த வகையில் செப்டம்பர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திருந்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் தொடங்கியது.

உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில் முருகன், தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதியாக மோகன், சுப்பிரமணிய மணியன், அயல் பணி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர்கள், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர்கள் ஈடுபட்டார்கள்.

இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரத்து 763 இருந்தது. ஆவணி திருவிழா தற்காலிக உண்டியலில் ரூ.25 ஆயிரத்து 520 ரூபாயும், மேல கோபுர திருப்பணி உண்டியலில் ரூ.875 ரூபாயும். கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.19 ஆயிரத்து 711 ரூபாயும் இருந்தது.

யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 89 ரூபாயும், கோவில் அன்னதானம் மூலம் ரூ.15லட்சத்து 8 ஆயிரத்து 214, மேல கோவில் உண்டியல் மூலம் ரூ.15 ஆயிரத்து 113 ரூபாயும், நாசரேத் கோவில் மூலம் ரூ. 1,315, கிருஷ்ணாபுரம் கோவில் மூலம் ரூ.7ஆயிரத்து 432ம் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 ரூபாயும் இருந்தது.

இதேபோல், தங்கம் 2 ஆயிரத்து 100 கிராமும், வெள்ளி 19 ஆயிரம் கிராமும், 424 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியலின் அடியில் ஏராளமான வித்தியாசமான காசுகளும் இருந்துள்ளன.

இந்த காசுகள் பல பலஆண்டுகள் பழமையானவை என்றும் கூறப்படுகிறது. இந்த காசுகள் பல பொக்கிசம் போல் பாதுகாக்கப்பட்டவை என்றும் சொல்லப்படுகிறது. அவற்றை திருச்செந்தூர் உண்டியலில் போட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+