தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடி அருகே நோய் பரப்பும் கழிவுகளை கொட்டிய விஷமிகள்
நெல்லை: தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடி அருகே கேரளாவில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட நோய்களை பரப்பும் கழிவுகளை யாரோ கொட்டிச் சென்றுள்ளனர்.
தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை வழியாக தினமும் கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் புளியரை வழியாக சென்று வருகின்றன.

கேரளாவில் இருந்து பல்வேறு நோய்களை பரப்பும் புழுக்கள் நிறைந்த கழிவுகளை தமிழகம் வரும் வாகனங்கள் ஏற்றி வந்து புளியரை பகுதியில் கொட்டி செல்வது வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புழுக்கள் நிரம்பிய கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை இப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் 3 சோதனைச்சாவடிகள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை தாண்டி கொடிய நோய்களை
பரப்பும் புழுக்கள் நெளியும் கழிவுகளை போக்குவரத்து, போலீஸ் சோதனைச் சாவடி அருகே சாலையின் ஓரத்தில் கொட்டி சென்றுள்ளனர். இதனால் தமிழக-கேரள எல்லையில் நோய் பரவும் அபாயமும், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு செங்கோட்டை தாசில்தார் சங்கரலிங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிருமி நாசினி பவுடர் தெளித்து கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications