போன உசிரு திரும்பி வந்திடுச்சி.. உதவி செய்த எல்லோருக்கும் நன்றி.. மாயமான ஆசிப் தாய் உருக்கம்
போன உயிர் திரும்ப வந்துள்ளதாக காணாமல் போன 3 வயது குழந்தை ஆசிப்பின் தாய் உசேனா பானு உருக்கமாக கூறினார். குழந்தை கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.
சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று காணாமல் போன 3 வயது ஆசிப் என்ற குழந்தை இன்று திரும்ப கிடைத்துள்ளதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள், பத்திரிகைகள் என அனைவருக்கும் தாய் உசேனா பானு நன்றி தெரிவித்துள்ளார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் உசேனா பானு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைகாக சென்றிருந்தார். அப்போது குழந்தை ஆசிப்பை உட்கார வைத்துவிட்டு சீட்டு வாங்கச் சென்றார்.
சீட்டு வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை ஆசிப் அங்கு காணவில்லை. இதனால் பதற்றமான உசேனா பானு, போலீசாரிடம புகார் அளித்தார்.

தேடுதல் வேட்டை
இதனையடுத்து போலீசார் 5 தனி படைகளை அமைத்து குழந்தை ஆசிப்பை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இன்று காலை குழந்தை விழுப்புரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

பெண் கைது
குழந்தை ஆசிப், சுபாஹணி என்ற பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சுபாஹணியிடம் போலீசாரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

குழந்தை ஒப்படைப்பு
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஆசிப்பை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் குழந்தையை கட்டித் தழுவினர்.

உசுரு வந்தது..
காணாமல் போன தனது குழந்தை கிடைத்த உடன் போன உசுரு திரும்பி வந்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறிய தாய் உசேனா பானு, குழந்தையை முத்தமிட்டு மகிழ்ந்தார். மேலும் குழந்தை கிடைக்க உதவிய போலீஸ் உயர் அதிகாரிகள், பத்திரிகைகள் என அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications