Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நந்தினி மீது கடுங்கோபம்! மருமகளின் தலையை வெட்டிய மாமியார் மேரி! கள்ளக்குறிச்சியில் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன நந்தினி, தனது மாமியாராலேயே தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மகனின் இரண்டாவது திருமணத்தால் கோபமடைந்த மாமியார், இந்த கொலையை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துள்ளார்.

சங்கராபுரம் வளையம்பட்டையைச் சேர்ந்த நந்தினி, விரியூர் மருத்துவர் ரொசாரியாவை இரண்டாம் திருமணம் செய்து, கணவருடன் விரியூரில் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவர் காணாமல் போயிருந்தார். இதையடுத்து, அவரது கணவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

crime kallakurichi

நந்தினியை அவரது மாமியார் கிறிஸ்துவமேரி அழைத்துச் சென்றதாக அவர் அப்புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் கிறிஸ்துவமேரியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தோழியுடன் சேர்ந்து மருமகள் நந்தினி தலையை வெட்டி படுகொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். நந்தினியின் தலையை ஒரு இடத்திலும், உடலின் மற்ற பாகங்களை வேறொரு இடத்திலும் புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

மகனின் இரண்டாம் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த மூன்று மாதங்களாகவே திட்டமிட்டு இந்த கொலையை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நந்தினியின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாமியாரால் மருமகள் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட இந்த கொடூர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+