நந்தினி மீது கடுங்கோபம்! மருமகளின் தலையை வெட்டிய மாமியார் மேரி! கள்ளக்குறிச்சியில் என்னாச்சு?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன நந்தினி, தனது மாமியாராலேயே தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மகனின் இரண்டாவது திருமணத்தால் கோபமடைந்த மாமியார், இந்த கொலையை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துள்ளார்.
சங்கராபுரம் வளையம்பட்டையைச் சேர்ந்த நந்தினி, விரியூர் மருத்துவர் ரொசாரியாவை இரண்டாம் திருமணம் செய்து, கணவருடன் விரியூரில் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவர் காணாமல் போயிருந்தார். இதையடுத்து, அவரது கணவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

நந்தினியை அவரது மாமியார் கிறிஸ்துவமேரி அழைத்துச் சென்றதாக அவர் அப்புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் கிறிஸ்துவமேரியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தோழியுடன் சேர்ந்து மருமகள் நந்தினி தலையை வெட்டி படுகொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். நந்தினியின் தலையை ஒரு இடத்திலும், உடலின் மற்ற பாகங்களை வேறொரு இடத்திலும் புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
மகனின் இரண்டாம் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த மூன்று மாதங்களாகவே திட்டமிட்டு இந்த கொலையை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நந்தினியின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாமியாரால் மருமகள் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட இந்த கொடூர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications