431 நாளில் செவ்வாய்க்கு ஒரு ட்ரிப்... சென்னை மாணவர்களின் ஆய்வறிக்கையை தேர்வு செய்தது நாசா

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவ்வாய் கிரகத்திற்கு 431 நாட்களில் சென்று வரலாம் என்ற சென்னை தனியார் கல்லூரி மாணவர்களின் ஆய்வறிக்கையை நாசா தேர்வு செய்துள்ளது.

சர்வதேச அளவில் பால்வெளி மற்றும் அதிலுள்ள மற்ற கிரகங்கள் பற்றி தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. அதன்படி, வரும் 2018-ஆம் ஆண்டில் இரு பயணிகளுடன் ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கான திட்டப் பணிகளை நாசா மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு சர்வதேச அளவில் கல்லூரி மாணவர்களிடையே போட்டி ஒன்றை நடத்தியது நாசா.

பொறியியல் கல்லூரி மாணவர்கள்...

பொறியியல் கல்லூரி மாணவர்கள்...

நாசாவின் இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிறந்த 10 கட்டுரைகள்...

சிறந்த 10 கட்டுரைகள்...

மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை பரிசீலித்த நாசா, அவற்றில் இருந்து சிறந்த 10 கட்டுரைகளை தேர்வு செய்தது.

சென்னை மாணவர்கள்...

சென்னை மாணவர்கள்...

அந்த வெற்றிப் பெற்ற 10 ஆய்வுக் கட்டுரையில், சென்னையில் உள்ள வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் சேர்ந்து அனுப்பிய ஆய்வுக்கட்டுரையும் ஒன்று.

செவ்வாய்க்கு ஒரு ஜாலி ட்ரிப்...

செவ்வாய்க்கு ஒரு ஜாலி ட்ரிப்...

ஐம்பது பக்கங்களைக் கொண்ட அந்த ஆய்வுக் கட்டுரையில் 431 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு சென்று வருவது எப்படி என தமிழக மாணவர்கள் அறிவியியல் பூர்வமாக விளக்கியிருந்தனர்.

நேரடி விளக்கம்...

நேரடி விளக்கம்...

சென்னைக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைத் தேர்வானதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி இத்திட்ட அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க நாசா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+