ஸ்டாலினுக்கு இந்த 2 பதவியும் எப்படி கிடைத்தது.. சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.. அழகிரி சவால்
Recommended Video

மதுரை: ஸ்டாலினுக்கு துணை முதல்வர் மற்றும் பொருளாளர் பதவிகள் எப்படி கிடைத்தன என்பதை மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என்று மு. க. அழகிரி சவால் விடுத்துள்ளார்.
திமுகவுக்கு தனது பலத்தை நிரூபிப்பேன் என கடந்த 5-ஆம் தேதி பேரணியை நடத்தினார். அப்போது லட்சக்கணக்கானோர் தனது பேரணிக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால் உண்மையை பார்க்கும் போது ஆயிரக்கணக்கானோர் மட்டுமே அங்கு கலந்து கொண்டார். இந்நிலையில் பேரணி குறித்து ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில பத்திரிகை சானலுக்கு அழகிரி பேட்டி அளித்தார்.

தந்தையிடம் எழுப்பினேன்
அப்போது அவர் கூறுகையில் பொதுக் குழுவே வழிமுறைகளுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டது. இதுதான் எனது குற்றச்சாட்டு. ஜனநாயக முறைபடி பொதுக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்தும் மற்ற விவகாரங்கள் குறித்தும் எனது தந்தையிடம் எழுப்பினேன்.

ஏற்பேன்
என்னை திமுகவில் இணைத்து கொண்டால் மட்டுமே ஸ்டாலினை தலைவராக ஏற்பேன் என்பதை ஏற்கெனவே தெளிவுப்படுத்திவிட்டேன். நான் ஸ்டாலினின் தலைமையை ஏற்க விரும்புவதாக ஊடகங்களும் திரித்து கூறிவிட்டேன்.

தலைமை
என்னை கட்சியில் சேர்த்து கொண்டால் மட்டுமே ஸ்டாலினின் தலைமையை ஏற்பேன் என்று கூறினேன். என்னை கட்சியில் சேர்த்து கொள்ளாவிட்டால் நான் எப்படி ஸ்டாலினை தலைவராக ஏற்க முடியும் ? கட்சியில் என்னை சேர்த்து கொள்ளாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியது தேர்தல் தோல்விகளைத்தான் கூறினேன். என்னை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு எந்த தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறவில்லை. இது தொடரும்.

துணை முதல்வர்
துணை முதல்வர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகள் ஸ்டாலினுக்கு எப்படி கிடைத்தது என்பதை அவரது மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அதை நான் சொல்லமாட்டேன். அவரது மனசாட்சிக்கு எல்லாம் தெரியும் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications