கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டு ஸ்டாலினை பெருமைப்படுத்திய அழகிரி!
Recommended Video

மதுரை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஊரணியோடு ஒப்பிட்டார் அவரது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி.
திமுக தலைவர் கருணாநிதி மறைவயடுத்து, திமுகவில் தன்னை இணைத்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்த அழகிரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கருணாநிதி எடுத்த முடிவில் நான் மாற்றம் செய்யப்போவதில்லை. அழகிரிக்கு மீண்டும் திமுகவில் இடமில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளாராம்.
இதையடுத்து, சென்னையிலிருந்து நேற்று மதுரைக்கு திரும்பினார் அழகிரி. மதுரை விமான நிலையத்தில், நிருபர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 5ம் தேதிக்கு பிறகு, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையை எடுப்பதாக தெரிவித்தார்.

ஊரணியுடன் ஒப்பிட்ட அழகிரி
ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு இருப்பதாக பிம்பம் உள்ளதே என்ற நிருபரின் கேள்விக்கு, பேரணியை பற்றி கேட்பதாக கூறிவிட்டு, ஊரணியை பற்றி கேட்கிறீர்களே என்று அழகிரி பதில் அளிக்க அவரை சுற்றிலும், நின்ற ஆதரவாளர்கள் சிரித்தனர். இதையடுத்து, உடனே பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு அழகிரி அங்கிருந்து சென்றார். கருணாநிதி போல ரைமிங்காக, அழகிரி பதில் அளித்தாலும், ஊரணி என்பதற்கான பொருள் என்ன என்ற கேள்வி பலரும் எழுந்துள்ளது.

ஊரணி என்றால் என்ன
தானாக ஊற்றெடுக்கும், பகுதி ஊரணி என்று பேச்சுவழக்கில் கிராமங்களில் அழைக்கப்படுகிறது. குளம் போன்ற பகுதியாக இருந்தபோதிலும், வெளியே இருந்து இங்கே தண்ணீர் வந்து சேராது. தானாக ஊற்றெடுத்து தண்ணீர் அந்த குளத்தையே நிரப்பும். அதன் பெயர் ஊரணி என்பார்கள். ஊரணியில் சென்று தண்ணீர் பிடித்து தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள கிராமத்தில் குடங்களுடன் பெண்கள் அணி வகுத்து செல்வதை பார்க்க முடியும். இப்படி ஊரார் தேவையை தீர்ப்பதுதான் ஊரணி.

வள்ளுவர் வாக்கிற்கிணங்க
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்பது திருவள்ளுவர் வாக்கு. தோண்டத்தோண்ட தண்ணீரை தருவது மணற்கேணி. அதுபோல கற்பது அதிகரித்தால் அறிவும் அதிகரிக்கும் என்பது பொருள். இதுபோல தோண்டத்தோண்ட தண்ணீர் தருவதுதான் ஊரணியும்கூட.

தம்பியை பெருமைப்படுத்திய அண்ணன்
எனவே, ஸ்டாலினை கலாய்ப்பதாக நினைத்துக்கொண்டு, அழகிரி ரைமிங்காக பேசினாலும், டைமிங் ரொம்ப தப்பு. உண்மையிலேயே, ஸ்டாலினை தானாக ஊற்றெடுக்கும் ஊரணியோடு ஒப்பிட்டு அவரை சிறப்பித்துள்ளார். ஊருக்கே உதவுபவர் என்று மறைமுகமாக கூறிவிட்டார் அழகிரி. இதனால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர்.
-
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications