அண்ணாவும், நானும் நைட் ஷோ பார்ப்போம்.. மலரும் நினைவுகளை அசைபோட்ட அழகிரி
மதுரை: அண்ணாதுரையும் நானும் நைட்ஷோ சென்று பார்ப்போம் என்று தனது மலரும் நினைவுகளை அழகிரி தெரிவித்தார்.
அஞ்சாநெஞ்சன் அழகிரியின் கோட்டையாக இருந்தது மதுரை. அப்போது தேர்தல் சமயங்களில் அழகிரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
தனக்கென்று ஆதரவாளர்களை சேர்த்து வைத்துள்ளார். இவர்களுக்கு முறைபட் திமுகவில் பதவி கொடுக்கவில்லை என்றுதான் தந்தை கருணாநிதியிடம் புகார் கூறிய அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
மலரும் நினைவுகள்
இந்நிலையில் தனது அரசியல் பயணம் உள்பட ஏராளமான விஷயங்களை அழகிரி ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு ஏராளமான மலரும் நினைவுகள் உண்டு.
பாடுமாறும் கேட்பார்
எங்களுக்கு சிறுவயதாக இருக்கும் போது அண்ணாதுரை அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது என்னையும் எனது அண்ணன் முத்துவையும் பாடல்களை பாடுமாறும் நடனம் ஆடுமாறும் கேட்பார்.
பிரியமாக இருப்பார்
காஞ்சிபுரத்துக்கு வருமாறும் அழைப்பு விடுப்பார். வாரத்தில் ஒரு நாள் எங்களை இரவு காட்சிக்காக சினிமாவுக்கு அழைத்து சென்றார். எங்கள் மீது மிகவும் பிரியமாக இருப்பார்.
எளிமை
அவர் கேரம் போர்டு, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளையும் எங்களுடன் விளையாடுவார். அப்பாவுடன் 11 வயது முதல் உடனிருப்பதால் அரசியலை கற்பது எளிதாக இருந்தது என்றார் அழகிரி.