கருணாநிதியின் பிள்ளைகளான நாமே நேரில் போய் எடப்பாடியிடம் கேட்போம்.. அழகிரி சொன்ன ஐடியா
சென்னை: கருணாநிதியின் இறுதி சடங்கு மெரினாவில் நடைபெற இடம் ஒதுக்க வேண்டும் என முதல்வரை ஸ்டாலின் உள்ளிட்டோர் போய் பார்க்க வேண்டும் என முன்முயற்சி எடுத்தது நான் தான் என்று அழகிரி தெரிவித்தார்.
கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இருந்தநிலையில் அவரது கடைசி ஆசையான மெரினாவில் சமாதி அமைக்க இடம் அளிக்க வேண்டும் என திமுக கோரியது. இதற்கு தமிழக அரசு மறுத்துவிட்டு காந்தி மண்டபத்தில் இடம் அளித்தது.
இதையடுத்து நீதிமன்றத்தை நாடிய திமுகவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து ரிபப்ளிக் வேர்ல்டு எனும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அழகிரி பேட்டி அளித்தார்.

அஞ்சலி செலுத்திய போது
அப்போது அவர் கூறுகையில் எனது தந்தையின் கடைசி ஆசை அவருக்கு அண்ணா சமாதிக்கு பக்கத்தில் அடக்கம் செய்வதுதான். அண்ணாதுரை இறந்தபோதே அவருக்கு அஞ்சலி செலுத்திய போது கருணாநிதி கூறியுள்ளார்.

ஆலோசனை
இதையடுத்து கட்சியின் நிர்வாகி ஒருவரை முதல்வரிடம் அனுப்பி கருணாநிதியின் இறுதி ஆசையை கூறி மெரினாவில் இடம் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனிமொழி, தயா அழகிரி, மற்றும் நான் ஆகியோர் ஆலோசனை நடத்தினோம்.

கோரிக்கை
அப்போது நான் கனிமொழியிடம் கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச கட்சி நிர்வாகிகளை அனுப்பக் கூடாது. அவர் நமது தந்தை. எனவே நான் , நீ, ஸ்டாலின், தமிழரசு, செல்வி ஆகிய 5 பேரும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என்றேன்.

மூவரும் சந்தித்தோம்
இந்த ஐடியாவை முன்முயற்சியாக கூறியதே நான்தான். அப்போது தமிழரசுவும் செல்வியும் வரவில்லை. நாங்கள் மூவர் மட்டும் சென்று முதல்வரை சந்தித்தோம் .
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications