ஸ்டாலின், மா.சு, அன்பழகன், சேகர்பாபு, கேபிபி சாமி, தனசேகரன், - 'தலைகளை' தலைநகரில் களமிறக்கும் திமுக
சென்னை: சென்னையில் 13 தொகுதிகளில் போட்டியிட உத்தேசித்துள்ள திமுக மு.க.ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, கொளத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம், ஆர்கே நகர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், துறைமுகம், எழும்பூர், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்ட திட்டமிட்டிருக்கிறது.
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின், சைதாப்பேட்டையில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம்,
வில்லிவாக்கத்தில் ப. ரங்கநாதன், ராயபுரத்தில் ஐட்ரீம் மூர்த்தி அல்லது வர்த்தக அணி துணைச்செயலாளர் பாண்டிச்செல்வம்,
ஆர்.கே.நகரில் சிம்லா முத்துசோழன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ஜெ.அன்பழகன்,
விருகம்பாக்கத்தில் கே.கே.நகர் தனசேகரன் அல்லது வர்த்தக அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம்,
துறைமுகத்தில் சேகர்பாபு, எழும்பூரில் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி அல்லது வழக்கறிஞர் பிரசன்னா,
பெரம்பூரில் ஆர்.டி.சேகர் அல்லது டாக்டர் கனிமொழி, மாதவரத்தில் சுதர்சனம்,
திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி அல்லது வழக்கறிஞர் கண்ணதாசன்
ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.