இந்தியா முழுவதும் காவி நிறம் பூச மோடி அரசு முயற்சி- ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு
Recommended Video

சென்னை: மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது என்று ஸ்டாலின் கடுமையாக கண்டித்தார்.
கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பொதுக்குழுவில் வெளியானது.

முன்னதாக பொதுக் குழுவில் கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக பொதுக் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில் அப்பா இல்லாவிட்டாலும் எனது பெரியப்பா பேராசிரியர் க.அன்பழகன் உள்ளார். கருணாநிதி போல் பேச முடியாவிட்டாலும் எதையும் முயன்று பார்க்கும் துணிவு உள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்று மட்டுமே வாழ்வேன் என உறுதியளிக்கிறேன்.
அப்பா இல்லாவிட்டாலும் எனது பெரியப்பா பேராசிரியர் க.அன்பழகன் உள்ளார். பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமானது. எனது வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர்கள் நீங்கள். கருணாநிதியின் மகன் என்பதைவிட தொண்டன் என்பதிலேயே மகிழ்ச்சி அடைவேன்.
புதிய வரலாறை நோக்கி தமிழகத்தையும், கழகத்தையும் அழைத்து செல்ல விரும்புகிறேன். சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு என்பதே திமுகவின் 4 தூண்கள் ஆகும்.
சுயமரியாதை எனும் முதுகெலும்பு இல்லாத மாநில அரசு தமிழகத்தில் உள்ளது. மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது. தமிழக மக்களின் நலன்களை கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது அண்ணா பெயரில் உள்ள கட்சி.
பகல் கொள்ளையடித்துக் கொண்டுள்ளாார்கள். தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து விடுவிக்க வேண்டியதே நமது முதல் பணி. தமிழகத்திலுள்ள இன்றைய ஆட்சி அவலத்தில் உள்ளது.
இதை நினைக்கும்போது, நெஞ்சு பொறுக்குதில்லையே, அஞ்சி அஞ்சி சாவார் என்ற பாரதி வரி நினைவிற்கு வருகிறது. நாம் யார், நமது கொள்கைகள் என்ன, நமக்குள் இருக்கும் குறைகள், காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது என்ன என்றார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications