அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த குழுமூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்
அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் மாவட்டம் குழுமூருக்கு இன்று மாலை செல்கிறார் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின்.
சென்னை: தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், அரியலூர் மாவட்டம் குழுமூருக்கு இன்று மாலை செல்கிறார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களான திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், வீரமணி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பேசிய திருமாவளவன் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குழுமூருக்கு முக ஸ்டாலின் நேரில் வருகிறார் என்று திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications