வைர விழா நாயகனுக்கு நினைவு பரிசு வழங்கிய மு.க.ஸ்டாலின்
சென்னை: கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது கோபாலபுரம் இல்லத்தில் அவரை சந்தித்த மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் விழாவும், அவர் அரசியலில் 60 ஆண்டுகளாக நீடித்து வருவதை கொண்டாடும் வகையில் வைர விழாவும் நேற்று ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.
அதற்கு முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் இருந்தார்.
அப்போது கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்படும் நினைவுப் பரிசானது கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. அதை அவரது வீட்டில் சந்தித்த ஸ்டாலின் வழங்கினார்.
வைர விழா நாயகனுக்கு நினைவு பரிசு வழங்கிய மு.க.ஸ்டாலின் https://t.co/bTV8AfFQ7q pic.twitter.com/RUdpuU4Ds2
— Oneindia Tamil (@thatsTamil) June 4, 2017
இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.