இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்த ஸ்டாலின்.. மருத்துவமனையில் ஆறுதல்!
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்ச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது.

காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடினார்கள்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 26 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்லோரும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கருணாநிதி இறுதி சடங்கு கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications