பிரதீபாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி
பிரதீபாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video

திருவண்ணாமலை: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவுக்கு திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா, பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் நீட் தேர்வில் அவர் தோல்வி அடைந்துவிட்டார்.

இதனால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
#NEET தேர்வினால் தன் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட விழுப்புரம் மாவட்டம் பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். #BanNEET pic.twitter.com/5KPzBfKmMj
— M.K.Stalin (@mkstalin) June 5, 2018
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் நீட் தேர்வினால் தன் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட விழுப்புரம் மாவட்டம் பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications