அமைச்சர் தங்கமணிக்கு ஒரு வாரம் கெடு விதித்த ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அமைச்சர் தங்கமணிக்கு கெடு விதித்த ஸ்டாலின்-வீடியோ
சென்னை: மின்துறை அமைச்சர் தங்கமணி மீது தாம் ஆதாரப்பூர்வமாகவே ஊழல் புகார் கூறியதாகவும், ஒரு வாரத்திற்குள் அவர் வழக்கு தொடர வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது ஸ்டாலின் கூறியதாவது: மின்துறை அமைச்சர் கூறியதுபோல ஒரு வாரத்தில் தன் மீது வழக்குத் தொடரவில்லை எனில், நான் வழக்கு தொடருவேன்.

இதை சிபிஐ வரை கொண்டு செல்வேன். குட்கா ஊழல் பற்றி நான் குற்றம்சாட்டியபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் என் மீது வழக்கு போடுவதாக கூறினார். இதுவரை வழக்கு போடவில்லை. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications