இறந்ததாக கூறி வாக்காளர்பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள்.. மேடையில் ஏற்றி குட்டை உடைத்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கடலூர் : வாக்காளர் பட்டியலில் தி.மு.க. வினரின் பெயர்கள் திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், அவ்வாறு நீக்கப்பட்டவர்களையும் மேடையேற்றி மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கடலூர் புதுச்சத்திரம் மைதானத்தில் நீதி கேட்கும் பேரணியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். இந்த பேரணிக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின் தனது உரையில் கூறியதாவது..

stalin

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சொல்லமுடியாத துயரத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கி பெற்றி பெற்ற ஆணவத்தில் அதிமுக. திளைக்கிறது. பொதுத்தேர்தலிலும் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ள அதிமுகவிற்கு இடம் தரக்கூடாது.

சட்டசபை தேர்தல், நடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ளது. பிரவீன்குமார் ஆணையராக இருந்தார். இவர் அக்கிரமத்திற்கு துணை நின்றார். இப்போது சந்தீப் சக்சேனா, பிரவீன் குமாரை தோற்கடிக்கும் அவர் அக்கிரமத்திற்கு துணை போய் இருக்கிறார்.

சமீபத்திய இடைத்தேர்தலில் ஓட்டுக்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. தொகுதியில் தொடர்பு இல்லாதவர்கள் கள்ள ஓட்டு போட்டனர். நான் கலைஞர் மகன். எதையும் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன்.

மாவட்டம்தோறும் உயிருடன் இருக்கும் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரின் பெயர்களை இறந்ததாகக் கூறி திட்டமிட்டே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது

இவ்வாறு குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், பூவிருந்தவல்லி தொகுதியில் இறந்ததாக கூறி நீக்கப்பட்ட 4 பேரை மேடையில் ஏற்றி அறிமுகம் செய்துவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+