புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பைக்கில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின்
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பைக்கில் சென்று பார்வையிட்டார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
வர்தா புயலால் சென்னை அலங்கோலமாகிவிட்டது. புயல் கரையை கடந்தபோது சென்னையில் கனமழை பெய்ததுடன், பேய்க்காற்று வீசி மக்களை அச்சத்தில் ஆழ்த்திவிட்டது.

சீரமைப்பு பணிகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பைக்கில் சென்று பார்வையிட்டார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்க்ததில் கூறியிருப்பதாவது,
வர்தா புயல் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களை தாக்கி பொதுமக்களுக்கு ஒரு கடுமையான பாதிப்பை உண்டாக்கி சென்றிருக்கிறது. சென்னை மாநகரமே முழுமையாக முடங்கி இருக்கின்ற நிலையில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை நேரில் பார்வையிட்டேன்.
சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தவும், சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கவும் அரசுத்துறைகள் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் அவர்களுக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களுக்கு உதவிட வேண்டும் என்று நான் ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று கழகத் தோழர்கள் கடமையாற்றி வருவதையும் கேட்டறிந்தேன்.
புயலாலும் நேற்று பெய்துள்ள மழையின் காரணமாகவும் தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலை உருவாகும் என்பதால், அதனை முன்கூட்டியே தடுக்கின்ற முயற்சியில் அரசும், மாநகராட்சியும் உடனடியாக தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்கவும், குடிநீர், பால் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் கேட்டு கொண்டேன்.












Click it and Unblock the Notifications