திருநங்கை சப் இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினி.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சேலத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி காவல்துறையின் துணை ஆய்வாளர் பதவி பெற்றதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினி, காவல்துறை துணை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. திருநங்கையான இவர், தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதினார்.

இதில் அவர் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பணி நியமன ஆணையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வழங்கினார். இதையடுத்து ஓராண்டாக வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் யாசினி பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து எஸ்.ஐ.பணிக்கு தேர்வான பிரித்திகா யாசினி தருமபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார்.
இந்நிலையில் தருமபுரி உதவி காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற திருநங்கை பிருத்திகாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி முடிந்து தர்மபுரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் சேலத்து திருநங்கை பிரித்திகா யாசினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களைப் பாதுகாக்க அந்தப் பணியில் அவர் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் பல படைக்க வேண்டும் என்பதே திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான திட்டங்களை நிறைவேற்றி அரும்பாடுபட்ட திமுகவின் விருப்பம் ஆகும்.
15.4.2008 அன்று கருணாநிதி, இவர்களுக்கு திருநங்கைகள் என்று பெயர் சூட்டி, நல வாரியம் அமைத்து, அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவற்றை வழங்கி திருநங்கைகளுக்கு சம உரிமை, சம நீதி கிடைக்க பாடுபட்டார். பொருளாதார சுதந்திரம் பெறுவதற்கு ஏற்ற வாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு திருநங்கைகளுக்காக கழக ஆட்சியில் 150க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்க ஆணையிட்டு, அப்படி அமைக்கப்பட்ட குழுக்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்த நான் நிதியுதவி வழங்கியிருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சேலத்து திருநங்கை போல் திருநங்கைகள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தை மிகுந்த தன்னம்பிக்கையுடன் சந்தித்து வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் பிரித்திகா யாசினி சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் பல படைக்கவேண்டும் என்றும் அவர் போல் திருநங்கைகள் வெற்றி மேல் வெற்றி பெறவேண்டும் என்றும் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications