ஒ.பன்னீர் செல்வத்திற்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்? கேட்கிறார் கலைச்செல்வன்
கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தருவது ஏன் என்று எம்எல்ஏ கலைச்செல்வன் கேட்டுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனை விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர், சின்னத்தை முடக்க காரணமான பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக 19 பேர் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து விட்டு புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்களின் கேள்வி எல்லாம், ஓ.பன்னீர் செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்பதுதான்.

விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன் தினகரன் வீட்டில் அவரைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன், 122 எம்எல்ஏக்களில் ஒருவரை துணை முதல்வராக்காமல், சின்னத்தை முடக்க காரணமான பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? என்றார்.என்னை போன்று மனக்குமுறலுடன் பல எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது என்றும் கலைச்செல்வன் கூறியுள்ளார். கலைச்செல்வன் மட்டுமல்ல தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரின் கேள்வியும் இதுவாகத்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications