அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு புறக்கணிப்பு.. தினகரன் ஆதரவு எம்எல்ஏவால் சட்டசபையில் சலசலப்பு
சட்டசபையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை தினகரன் ஆதரவு எம்எல்ஏ சுப்பிரமணியன் புறக்கணித்தார். இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அவரது பேச்சை சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் புறக்கணித்தார். அதிமுக எம்எல்ஏ அவரது பேச்சை புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இன்று சட்டசபையில் பால்வளத் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான கேள்விகளுக்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்தார்.

அப்போது திடீரென எழுந்த சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன், அமைச்சரின் பேச்சை புறக்கணிப்பதாகக் கூறினார். தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அமைச்சர் ஒத்துழைப்பு தருவதில்லை என்று அவர் புகார் கூறி அமைச்சரின் பேச்சை புறக்கணித்தார்.
சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன், தினகரனுக்கு ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications