சூப்பர் எம்.எல்.ஏ... மக்களின் கருத்தைக் கேட்க பெட்டி வைத்த நாகை தமிமுன் அன்சாரி!
நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மக்களின் கருத்தைக் கேட்டு வருகிறார்.
நாகை: நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மக்களின் கருத்தைக் கேட்க தனது அலுவலகத்தில் கருத்துப் பெட்டி ஒன்றை வைத்துள்ளார். முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களை எழுதி பெட்டியில் போடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் நிலவரம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அடுத்து யார் ஆதரவளிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பில் ஓபிஎஸ் அணியும், அடுத்து யார் ஓட்டம்பிடிப்பார் என்ற பீதியால் சசிகலா அணியும் உள்ளன.

முதல்வர் ஓபிஎஸ்க்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களும் சசிகலா மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக ஓபிஎஸ்க்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் எப்போது யார், ஓபிஎஸ் பக்கம் மாறிவிடுவார்களோ என்ற பயத்திலே உள்ளது சசிகலா தரப்பு. இந்நிலையில் நாகை தொகுதி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது அலுவலகத்தில் கருத்து கேட்பு பேட்டி வைத்துள்ளார்.
முதலமைச்சர் யார் என தேர்நதெடுக்க மக்களின் கருத்துகளை அறிய கருத்து கேட்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அதிமுக ஆதரவு எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications