பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. "சசிகலா"வாக மாறிய வெற்றிவேல்!
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகள் இணைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்றும் எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் எம்எல்ஏ வெற்றிவேல் கூறினார்.
சென்னை அடையாற்றில் உள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வீட்டிற்கு எம்எல்ஏ வெற்றிவேல் சென்றார்.
அங்கு அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் நரசிம்ம ராவ் மாதிரி அமையாக ஏன் இருக்க வேண்டும்? கூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சியே இருந்திருக்காது.

பொறுமைக்கும் எல்லை..
அதிமுகவின் இரு அணிகள் இணைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, முதல்வர் இனியும் மவுனம் காக்கக் கூடாது.

உத்தமர் போல..
கோ. அரி போன்று தவறு செய்பவர்களை எப்படி கிள்ளி எறிய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அவர் உத்தம சீலன் போல் பேசக் கூடாது. தான்தோன்றித்தனமாக பேசி வரும் அவரை தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து பேசாமல் எத்தனை நாட்களுக்கு முதல்வர் அமைதியாக இருப்பார்?

சசிகலாவிற்கு கட்டுப்பட்டது..
அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களுக்குத்தான் இந்தக் கட்சியும் கட்டுப்பட்டது. ஏனென்றால் அவர்தான் பொதுச் செயலாளர்.

சசியிடம் ஆதரவு
பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று தம்பிதுரை சசிகலாவை சந்தித்தார். சந்திக்கும் போது எடப்பாடி பழனிச்சாமியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சசிகலாவிடம் பேசினார். இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் முதல்வரை? சசிகலாவை சந்திக்கும் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டுள்ளார் என்பதை தம்பிதுரை தெரிவித்தார்.

மடியில் கணம் இல்லை
இந்த சம்பவம் நடக்கும் போது யார் யார் உடன் இருந்தார்கள் என்பதும் எனக்குத் தெரியும். சில விஷயங்களை வெளியே சொல்லக் கூடாது என்பதற்காக நான் அமைதியாக இருக்கிறேன். வெளியே சொல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு சென்றுவிடுவேன். ஏனென்றால் எனக்கு பயம் கிடையாது. காரணம் மடியில் கணம் கிடையாது என்று வெற்றி வேல் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications