நாம 4 பேரு இப்போ 5 ஆயிட்டோம்... தேமுதிக வருகையை ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய ம.ந.கூ. தொண்டர்கள்!
சென்னை: மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்ததன் மூலம் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்ற புதிய கூட்டணி இன்று உருவாகியுள்ளது. இதனை அக்கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
[தேமுதிக -ம.ந.கூ.கொண்டாட்டம்- படங்கள்]
தமிழக சட்டசபைத் தேர்தலில் வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டணியில், இன்று தேமுதிகவும் கைகோர்த்துள்ளது. யாருடன் கூட்டணி சேர்வார் என்ற பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜயகாந்த், முதலில் தனித்துப் போட்டி என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று திடீரென இந்த புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானதால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

தொண்டர்கள் கூட்டம்...
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலக வாசலில் காலை முதலே மக்கள்நலக் கூட்டணி மற்றும் தேமுதிக தொண்டர்கள் கூட்டம் காணப்பட்டது.

முன்னேற்பாடாக...
நல்ல செய்தி நிச்சயம் வெளியாகும் என்ற ஆவலில் முன்னேற்பாடுடன் இனிப்புகள் மற்றும் பட்டாசுகளோடு அவர்கள் காட்சி தந்தனர்.

பட்டாசுகள் வெடித்தனர்...
இந்நிலையில், புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானதும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், சாலையில் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஸ்வீட் எடு கொண்டாடு...
பின்னர், தாங்களே ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

வாகன ஓட்டிகளுக்கும்...
அதோடு சாலையில் வாகனங்களில் சென்றோருக்கும் அவர்கள் இனிப்புகள் வழங்கினர். அப்படி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு இனிப்பு வழங்கும் புகைப்படம் தான் இது.












Click it and Unblock the Notifications