Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ம.ந.கூ. முயற்சி.. வி.சி.சந்திரகுமார் பரபரப்புப் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் முயற்சியில் மக்கள் நலக் கூட்டணி ஈடுபட்டுள்ளது. இதற்கு தேமுதிகவைப் பலிகடாவாக்கி விட்டார்கள் என்று வி.சி.சந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக நேற்று புரட்சியில் குதித்தார் கட்சிக் கொறடாவாக இருந்து வந்த வி.சி.சந்திரகுமார். அவருடன் மேட்டூர் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் விஜயகாந்த்துக்கு எதிராக திரும்பினர்.

MNK tries to bring ADMK back into power, says VC Chandrakumar

இதையடுத்து சந்திரகுமார் உள்ளிட்ட அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார் விஜயகாந்த். இந்த நிலையில் மீண்டும் சந்தித்த சந்திரகுமார் உள்ளிட்டோர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் மீது சரமாரியாக புகார்களை அடுக்கினர்.

சந்திரகுமார் கூறுகையில், மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தால் ஜெயிக்கவே முடியாது என்று விஜயகாந்த்துக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் கூட்டணி வத்தார்.

மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார். தொகுதியில் 10,000 ஓட்டு கூட வாங்க முடியாது. உண்மையில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவே மக்கள் நலக் கூட்டணி முயல்கிறது. இதற்கு தேமுதிகவை பலிகடாவாக்கி விட்டார்கள்.

MNK tries to bring ADMK back into power, says VC Chandrakumar

தற்போது வைகோவுடன் வைத்துள்ள கூட்டணி, விஜயகாந்த் நடந்து கொள்ளும் முறை ஆகியவை ஜெயலலிதாவுக்கு மறைமுகமாக செய்யும் உதவியே ஆகும் என்றார் சந்திரகுமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+