தூத்துக்குடி இன்னொரு போபாலாகி விடக் கூடாது... ஏப்ரல் 1ல் ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் கமல்!
தூத்துக்குடி இன்னொரு போபாலாகிவிடக்கூடாது என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவுடன் ஏப்ரல் 1ம் தேதி போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 1ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது : தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மக்களாக சென்று அவர்களின் போராட்டத்தில் அமர இருக்கிறேன். வருகிற ஞாயிற்றுக் கிழமை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கிறேன்.

போராட்டத்திற்கு பங்கேற்க செல்ல வேண்டும் என்று நானே நினைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களுக்காக சில பேர் வரவேண்டாம் என்று சொன்னார்கள். அந்தப் பட்டியலில் என்னையும் சேர்த்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களே அழைக்கட்டும் என்று காத்திருந்தேன்.
அதே போல நேற்று அந்த அழைப்பு வந்தது, விரைவில் தூத்துக்குடி சென்று போராட்டக் களத்தில் இணைகிறேன். 47 நாட்களாக மக்களின் போராட்டம் நடக்கிறது, அதில் பங்கேற்பது மக்களின் பிரதிநிதியாக என்னுடைய கடமை என்பதால் நான் அங்கு செல்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்று தான் நானும் வலியுறுத்துகிறேன். ஸ்டெர்லைட் ஆலை சில விதிகளை மீறியுள்ளது, இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அபாயகரமான பகுதியாக மாறி வருகிறது என்பது கண்முன்னே தெரிகிறது, போபாலில் நடந்தது போல தூத்துக்குடியிலும் நடக்காமல் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications