For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாண்டியாவில் தருமபுரியை சேர்ந்த தமிழர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சி!

By Mathi
Google Oneindia Tamil News

தருமபுரி: கர்நாடகாவின் மாண்டியாவில் தருமபுரியைச் சேர்ந்த நவாஸ்பாஷா என்பவர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நவாஸ் பாஷா என்பவர் இன்று அம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் நவாஸ் பாஷா கூறியதாவது:

Mobs try to burnt alive TN Family at Mandya

தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த 11-ந் தேதி உறவினர்களுடன் நானும் சென்றிருந்தேன்.

மறுநாள் நாங்கள் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது மாண்டியாவின் புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் எங்கள் கார் வந்தது.

திடீரென ஒரு கும்பல் நாங்கள் வந்த காரின் தமிழக பதிவு எண்ணை பார்த்துவிட்டு அப்படியே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்தது. இதனால் பதறியடித்து நாங்கள் வெளியேறி அருகே இருந்த காட்டுக்குள் ஓடினோம்.

பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ரயில் மூலம் தப்பித்து சொந்த ஊர் திரும்பியுள்ளோம். நாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு நவாஸ்பாஷா கூறினார்.

English summary
A mob try to burnt alive a Tamilnadu family at Mandya on Sep.11
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X