இனிமேல் நிலவில் இருந்து பார்த்தால் "தமிழ்" தெரியும்! அமைச்சர் அதிரடி.. 100 ஏக்கரில் மாதிரி காடு!
சென்னை: தமிழ் என்ற வடிவில் 100 ஏக்கரில் மாபெரும் வனம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில், நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழ் என்ற வடிவில் 100 ஏக்கரில் மாபெரும் வனம் உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுசூழல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக மெய்யநாதன் கூறியதாவது:- "தமிழ் என்ற வடிவில் 100 ஏக்கரில் மாபெரும் வனம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில், நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் 25 இடங்களில் காற்று தர கண்காணிப்பு அமைக்க இருக்கிறோம்.
இதற்காக 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குப்பை கிடங்குகள் மோசமாக இருந்த நிலையை பார்த்தோம். அது நிலத்திற்கு மட்டும் அல்ல. காற்றையும் அதிகம் மாசுபடுத்தக்கூடிய நிலை அறிந்து முதல்வர் அவர்கள் நகர்புற வளர்ச்சி அமைச்சர் மூலமாக தமிழ்நாட்டில் தேங்கியிருக்கிற 269 குப்பை கிடங்குகள் கண்டறியப்பட்டு 180 இடங்களில் பயோ மைனிங் முறையில் அகற்றும் முறையில் மேற்கொண்டு வருகிறார்கள்.

132 ஏக்கர் உயிர் நிலங்கள் மீட்கபப்ட்டு 51,600 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் தமிழ்நாடு குரோமியம் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் இயங்கியது. அந்த பகுதியில் குரோமிய கழிவுகள் தேங்கியிருந்தது. மிக மிக ஆபத்தானது.
அதனை நேரடியாக பார்வையிட்டு அந்தந் குரோமிய கழிவுகளை மக்கள் பாதிக்கப்படாத வகையில், நீர் நிலைகள் பாதிக்கப்படாத வகையில் ரூ. 15 கோடியில் நிறைவேற்ற இருக்கிறோம். புவி வெப்பயமாதலை தடுக்க பசுமை இல்ல கார்பன் டை ஆக்சைடு கட்டுப்படுத்தும் இலக்கை 2070 ல் அடைவோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், கார்பன் நியூட்ரல் என்ற நிலையை தமிழகம் 2070-க்கு முன்பாகவே எட்டும் என்ற மிகப்பெரிய அறிவிப்பை கொடுத்து இருக்கிறார்.

தமிழ்நாட்டின் மொத்த பரப்பு 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர கி.மீட்டர். தற்போதைய வனத்தின் பரப்பு 31 ஆயிரம் சதுர கி.மீட்டர். இதை 33 ஆயிரம் உயர்த்த்த வேண்டும் என்றால் 42 ஆயிரத்து 919 சதுர கி.மீட்டராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் அனைத்து வனங்களும் பாதுகாக்கப்படும். அந்த இலக்கை எட்டுவதற்கு 13 ஆயிரத்து சதுர கி.மீட்டர் நாம் மரங்களை நட்ட வேண்டும்.
நமக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் 100 ஏக்கர பரப்பளவில் ஒரு மாதிரிக் காடு உருவாக்கப்படும். நிலவில் இருந்து செயற்கை கோளில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாட்டில் தமிழ் என்று தெரியும் வகையில் ஒரு உலகத்தரம் வாய்ந்த திட்டம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications