தூய்மை இந்தியா திட்டம் வரும் முன்பு, திறந்த வெளியில் மலம் கழித்தோம்.. மோடியிடம் நெகிழ்ந்த சேலம் பெண்
சேலம்: தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மற்றொரு திட்டத்தை மோடி தொடங்கி வைத்ததை அடுத்து அவருடன் சேலம் பெண் ஒருவர் உரையாடினார்.
தூய்மையான பாரதத்தை உருவாக்குவோம் என்ற முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளன்று அக்டோபர் 2-ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மை பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டு காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அதேபோல் தூய்மை இந்தியா திட்டமும் 4-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

தூய்மை பணி
இதையடுத்து புதிய திட்டமான தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். இதன்படி டெல்லியில் பஹார்கஞ்சில் உள்ள பாபா சாஹீப் அம்பேத்கர் உயர்நிலை பள்ளியில் தூய்மை பணியை மேற்கொண்டார்.

மோடியிடம் பேச்சு
பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதையடுத்து நமோ ஆப் மூலம் பொதுமக்கள், மாணவர்களுடன் மோடி உரையாடினார். இதற்காக நாடு முழுவதும் 18 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த சுமதி என்பவர் மோடியிடம் பேசினார்.
|
தூய்மையின் அவசியம்
அவர் பேசுகையில் நான் 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக் குழுவில் பணியாற்றி வருகிறேன். தூய்மை இந்தியா திட்டம் வருவதற்கு முன்னர் எங்கள் கிராமத்து பெண்கள் வெட்ட வெளியில் மலம் கழித்தனர். இதையடுத்து தூய்மையின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தோம்.
|
ஏரியில் மரங்கள்
தூய்மையே சேவை திட்டத்தை முன்னிட்டு சேலத்தில் பெரும்பாலான இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளோம். ஏரியில் 1000 மரக்கன்றுகளை நடுகிறோம். சேலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாவட்டமாக மாற்றி காட்டுவோம் என்றார் அந்த பெண்.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications