இந்தியாவின் உயிர்நாடி நரேந்திர மோடி: நடிகர் கணேஷ்கர் பிரச்சாரம்
காரைக்குடி: இந்தியாவின் உயிர்நாடி நரேந்திர மோடி என்று காரைக்குடியில் பிரச்சாரம் செய்த நடிகர் கணேஷ்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான ஹெச். ராஜாவுக்கு ஆதரவாக நடிகர் கணேஷ்கர் பிரச்சாரம் செய்தார்.
காரைக்குடி சேர்வார் ஊரணியில் வாக்கு சேகரித்த அவர் கூறுகையில்,

இத்தாலிக்காரர்கள்
கடந்த 24 ஆண்டுகளாக நம் நாடு நம்மிடம் இல்லை. பாஜக ஆட்சியில் மக்கள் சொல்வதே சட்டம். ஆனால் தற்போதோ இத்தாலியைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள் சொல்வது தான் சட்டம்.

மோடி
நாட்டை மோடியால் மட்டும் தான் மீட்க முடியும். நம் நாட்டின் உயிர்நாடி நரேந்திர மோடி ஆவார். பிரதமர் வேட்பாளரான அவருக்கு எதிராக போட்டியிடுபவர்கள் சுரண்டியதோ கோடி. இனியும் அவர்களை அப்படியே விட்டுவிட்டால் காலி ஆகிவிடும் ஜாடி.

ஓட்டு
பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள் என்றார் கணேஷ்கர். கணேஷ்கர் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய அவரது மனைவி நடிகை ஆர்த்தியோ அதிமுகவுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்.

மக்கள்
கணேஷ்கர் வாக்கு கேட்டு வந்தபோது மக்கள் அவரைப் பார்த்து, தேர்தல் வந்தால் தான் வேட்பாளர்கள் எங்களை தேடி வருகிறார்கள். அதன் பிறகு அவர்களை பார்க்கவே முடியாது. நீங்களும் அப்படித் தானே என்று கேட்டனர்.












Click it and Unblock the Notifications