ஜெ. 70வது பிறந்தநாள் - மகிள மரம் நட்டு விழாவை தொடக்கி வைத்தார் மோடி
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி- வீடியோ
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 70 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மகிழ மரத்தை நட்டு தண்ணீர் ஊற்றினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அதிமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் அவரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு தொடக்கி வைக்கப்பட்டது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, இந்தாண்டு 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மகிழ மரத்தை நட்டு இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications