பிப். 2ல் கோவை வருகிறார் மோடி.. இஎஸ்ஐ மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார்

Subscribe to Oneindia Tamil

கோவை: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 2ம் தேதி கோவை வருகிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார்.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு அதிநவீன மருத்துவ கருவிகளுடன் புதிய சிகிச்சை பிரிவு கட்டவும், மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

Modi to visit Coimbatore on Feb 2

இதைத்தொடர்ந்து ரூ.650 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி கட்டடம் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு கட்டடம், 24 மணி நேர சேவை மையம் ஆகியவை கட்டப்பட்டன. இதையடுத்து மருத்துவக் கல்லூரி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு டீனும் நியமிக்கப்பட்டு விட்டார்.

இந்த மருத்துவக் கல்லூரிக்கு அனுதி வழங்குவது தொடர்பான ஆய்வையும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் முடித்து விட்டனர். இதையடுத்து இ.எஸ்.ஐ. வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள வெளி நோயாளிகள் பிரிவு கட்டடம், 24 மணி நேர சேவை மையம் ஆகியவை பிப்ரவரி 2ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+