அப்பா மோடி வந்திருக்காங்க.. ஸ்டாலின் மகிழ்ச்சி.. கருணாநிதி நெகிழ்ச்சி!
கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி பேசியதைக் கண்டு கோபாலபுரம் வீட்டில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.
Recommended Video

சென்னை: அப்பா உங்களைப் பார்க்க பிரதமர் மோடி வந்திருக்காங்க என்று கருணாநிதியிடம் கூறினார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். அதைக் கேட்டு உற்சாகத்துடன் சிரித்தார் கருணாநிதி.
சென்னை வந்த பிரதமர் மோடி இன்று கோபாலபுரத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் உடன் சென்றார்.
மத்திய பாதுகாப்பு படை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சென்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கருணாநிதியின் வீட்டிற்குச் சென்றனர். இந்த சந்திப்பின் போது திமுகவினரும் கோபாலபுரத்தில் இருந்தவர்களும் உற்சாகத்துடனே காணப்பட்டனர்.

ஸ்டாலின் சிவப்பு... கனிமொழி பச்சை
கோபாலபுரம் வந்த மோடிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் ஸ்டாலின். அப்போது கனிமொழி எம்.பி பச்சை நிற சால்வை கொடுத்து வரவேற்றார்.

நெகிழ்ச்சியான சந்திப்பு
மோடி நேராக சென்று கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு பேசினார். இந்த சந்திப்பு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. பாஜகவையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் அரசியலில் மூத்த தலைவரை வாஞ்சையுடன் சந்தித்து நலம் விசாரித்தார் மோடி.

விளக்கிய ஸ்டாலின்
அப்பா பிரதமர் மோடி வந்திருக்கிறார், கவர்னர் வந்திருக்கிறார், பாஜக தலைவர் தமிழிசை வந்திருக்கிறார் என்று ஒவ்வொருவராக பெயரை கூறி கருணாநிதியிடம் விளக்க அதை கேட்டு சிரித்தார் கருணாநிதி. அப்போது அருகில் ராஜாத்தி அம்மாள் நின்றிருந்தார். கருணாநிதியின் உடல் நலம் பற்றி மோடி கேட்டறிந்தார்.

நலம் விசாரித்த மோடி
வீட்டில் இருந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை தனியாக சந்தித்து தமிழிசை, மோடி ஆகியோர் நலம் விசாரித்தனர். அப்போது அனைவரையும் வரவேற்றார் தயாளு அம்மாள். அவரது உடல் நலம் பற்றியும் கேட்டறிந்தார்.

பிரதமரான பின் முதல் வருகை
சென்னைக்கு பலமுறை வந்திருந்தாலும், முதன் முறையாக கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்துள்ளார் பிரதமர் மோடி. இம்முறை பயணத்திட்டத்தில் இல்லாத இந்த சந்திப்பு சில நிமிடங்கள்தான் என்றாலும் தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி அதிக உற்சாகத்துடன் காணப்பட்டார்.

அதிர்வை ஏற்படுத்திய கோபாலபுரம் விசிட்
முரசொலி பவளவிழாவிற்கு பிரதமர் மோடிக்கோ, பாஜகவிற்கோ எந்த வித அழைப்பும் அனுப்பவில்லை. ஆனாலும் இன்று வந்த மோடிக்கு முரசொலி பவளவிழா புத்தகத்தை அளித்தார் கருணாநிதி. அரைநாள் பயணம் என்றாலும் சென்னையில் புதிய அதிர்வை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளார் மோடி. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் அரசியல் நோக்கம் நிச்சயம் உண்டு என்றே கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications