தூக்கில் தொங்கிய தாய், குழந்தைகள்! "இப்படி பண்ணிட்டீங்களே.." கதறும் லேத் பட்டறை உரிமையாளர்
விருத்தாச்சலம்: குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே வீட்டில் தாய், மகன், மகள் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். இவர் சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் சகீராபானு (வயது 40) என்ற மனைவியும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத் (வயது 12), 5 ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஹேமவர்ஷினி (வயது 10) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஒரே வீட்டில்
நேற்று வழக்கம்போல் அனைவரும் வீட்டில் உறங்கி இருக்கிறார். குமார் வீட்டில் உள்ள கூடத்தில் படுத்து உறங்கி உள்ளார். அவரது மனைவி சகீராபானு மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் அறைக்குள் படுத்து தூங்கி உள்ளனர். இந்த நிலையில் காலை வெகு நேரமாகியும் மனைவியும் குழந்தைகளும் அறையிலிருந்து வெளியே வரவில்லை.

தூக்கிட்டு தற்கொலை
அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார் குமார். அப்போது மனைவி, மகன், மகள் என மூவரும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

போலீஸ் விசாரணை
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று உடல்களையும், மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சகீராபானுக்கு இடையே, கடந்த மூன்று மாதங்களாக பிரச்சனை இருந்து வந்ததது தெரிய வந்தது.

குடும்ப பிரச்சனை
இதனால் மனமுடைந்த ஷகீரா பானு, தனது மகன் மற்றும் மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து, மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டதாகவும், அதன் பின்னர் சகீரா பானுவும் மின்விசிறியில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று இதேபோல் கன்னியாகுமரியில் தந்தை, மனைவி, மகள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications