கோடை விடுமுறையால் அதிகரிக்கும் ரயில் பயணிகள்- பாதுகாப்பு பணியில் கூடுதலாக 1500 போலீசார்
மதுரை: கோடைவிடுமுறையில் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக கூடுதலாக 1,500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தமிழக ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன் நேற்று மதுரை ரயில்வே போலீஸ் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர், ""கோடைவிடுமுறை தொடங்கியுள்ளதால் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

கூடுதலாக 1500 போலீஸ்:
அதனை தொடர்ந்து குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க வருகிற ஜூன் மாதம் வரை ரோந்து பணிக்காக கூடுதலாக 1500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயின் பறிப்புகளைத் தடுக்க:
அதாவது ஒவ்வொரு ரயிலிலும், வருகிற ஜூன் மாதம் வரை 6 போலீசார் ரோந்து பணிக்கு செல்வர். ரயில்களில் பெரும்பாலும், அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பெண் பயணிகளிடம் செயினை பறித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கதவை மூட உத்தரவு:
இதற்காக ரயில் புறப்பட்டவுடன் ரயில் பெட்டியின் கதவுகளை மூடுவதற்கு ரயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீவிரமான கண்காணிப்பு:
அதேபோல, நள்ளிரவில் வயதான பயணிகள் ரயில்களில் இருந்து இறங்கி பிளாட்பாரங்களில் நிற்பது வழக்கம். அந்த சமயங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 20 நாட்களாக ரயில்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது.

தண்டவாள தடுப்புப் பிரிவு:
ரயில்களில் அடிபட்டு இறந்து போகும் சம்பவங்களை தடுப்பதற்காக தண்டவாள தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் விபத்தில் இறக்கும் சம்பவங்களும் குறைந்துள்ளன.

சில்மிஷம் செய்தால் சங்குதான்:
ரயில்பெட்டிக்குள் மது அருந்திவிட்டு சக பயணிகளிடம் தகராறு செய்பவர்கள், பெண் பயணிகளிடம் சில்மிஷங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உடனடியாக புகார் மனு:
இந்த குற்ற செயல்களில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்கள், படித்தவர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் அரசுத் துறையில் உயர்பதவியில் இருப்பவர்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் பயணிகள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக புகார் மனு ரசீது வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications