தமிழகம் முழுவதும்... ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டியதாக 1.30 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு
சென்னை: தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்களில், 'ஹெல்மெட்' அணியாமல் சென்றதாக 1.30 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஜூலை 1ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹெல்மெட் அணிந்து தான் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மதுரை மற்றும் திருச்சியை சேர்ந்த வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜரானார். அப்போது, அவர் கூறியதாவது:

சென்னையில் மட்டும்...
சென்னையில், வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில், கடந்த 12 நாட்களில் 14 ஆயிரத்து 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1.30 லட்சம் வழக்குகள்...
சென்னை உட்பட தமிழகம் முழுவதையும் கணக்கிட்டால் சுமார் 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னுரிமை தேவை...
சென்னையில் உள்ள நீதிமன்றங்களில், 'ஹெல்மெட்' வழக்குகளுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். மாலை நேர நீதிமன்றங்கள் சனி கிழமையும் கூட இந்த வழக்குகளுக்காக இயங்கலாம்.

விசாரணை தொடர்கிறது...
அதற்கான உத்தரவை, உயர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். மதுரை, திருச்சியில், விதிகளை மீறிய வழக்கறிஞர் மீதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடர இருக்கிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications