காகித ஆலையில் பிடிக்க பிடிக்க சிக்கிய 156 பாம்புகள்
கரூர்: கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான காகித தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 156 பாம்புகள் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகளூரில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டிஎன்பிஎல் என்னும் காகித தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் பாம்புகள் அதிக அளவில் உலாவுதாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் பாம்புகளை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி காஞ்சிபுரத்தை சேர்ந்த இருளர்கள் பாம்பு பிடிக்கும் கூட்டுறவு சங்கத்தை அணுகி உதவி கோரினர்.

இதையடுத்து கடந்த மாதம் 25-ந் தேதி அந்த சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் 11-பேர் கொண்ட ஒரு குழுவினர் காகித ஆலைக்கு வந்தனர். நேற்று வரை அவர்கள் பாம்பு பிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்த பாம்புகள் தேடும் பணியின் போது ஏராளமான பாம்புகள் சிக்கின. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என விஷம் உள்ள வகையை சேர்ந்த 33-பாம்புகள் பிடிக்கப்பட்டது. மேலும், பச்சை பாம்பு, குக்ரி பாம்பு, கொம்பேறி மூக்கன் உள்ளிட்ட 123 விஷம் இல்லாத பாம்புகளையும் பிடித்தனர். சுமார் 1 அடி முதல் 10 அடி நீளமுடைய 13 வகையான, 156 பாம்புகள் இவற்றில் அடங்கும்.
அந்த பாம்புகள் அனைத்தும் நேற்று மாலை நாமக்கல் மாவட்ட வன அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு, வனத்துறையினர் முன்னிலையில் பாம்புகளின் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவைகள் அனைத்தும் நாமக்கல் வனச்சரகர் கனகரத்தினம் முன்னிலையில் கொல்லிமலை காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications