காவிரியில் திறந்துவிடப்பட்ட கழிவுநீர்... இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 50 சாயப்பட்டறைகள்
நாமக்கல் அருகே காவிரியில் கழிவுநீரை திறந்துவிட்ட 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
நாமக்கல்: நாமக்கல் அருகே கழிவுநீரை காவிரியில் திறந்துவிட்ட 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனுமதியின்றி சாயப்பட்டறைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 200 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இதில் 50 சாயப்பட்டறைகள் மட்டுமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அரசு அனுமதியை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையம் இல்லை என தெரிவிகிறது. சுத்தப்படுத்தப்படாத சாயகழிவு நீரால், நிலத்தடி நீர்வளமும், காவிரி ஆறும் மாசுபட்டு வருகிறது.
இந்நிலையில் சாயக்கழிவுகளை ஏராளமான சாயப்பட்டறைகள் காவிரி ஆற்றில் திறந்துவிடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து எந்தந்த நிறுவனங்கள் சாயக்கழிவுகளை காவிரியில் திறந்துவிடுகின்றன என அதிகாரிகள் ரகசிய ஆய்வு நடத்தினர்.
அதில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்றி செயல்பட்டு வந்ததும் சாயக் கழிவுகளை காவியாற்றில் திறந்துவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளை நாமக்கல் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சுத்திகரிப்பு நிலையம் இன்றி சாயப்பட்டறைகளை இயக்கிவரும் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications