காவிரியில் திறந்துவிடப்பட்ட கழிவுநீர்... இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 50 சாயப்பட்டறைகள்
நாமக்கல் அருகே காவிரியில் கழிவுநீரை திறந்துவிட்ட 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
நாமக்கல்: நாமக்கல் அருகே கழிவுநீரை காவிரியில் திறந்துவிட்ட 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனுமதியின்றி சாயப்பட்டறைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 200 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இதில் 50 சாயப்பட்டறைகள் மட்டுமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அரசு அனுமதியை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையம் இல்லை என தெரிவிகிறது. சுத்தப்படுத்தப்படாத சாயகழிவு நீரால், நிலத்தடி நீர்வளமும், காவிரி ஆறும் மாசுபட்டு வருகிறது.
இந்நிலையில் சாயக்கழிவுகளை ஏராளமான சாயப்பட்டறைகள் காவிரி ஆற்றில் திறந்துவிடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து எந்தந்த நிறுவனங்கள் சாயக்கழிவுகளை காவிரியில் திறந்துவிடுகின்றன என அதிகாரிகள் ரகசிய ஆய்வு நடத்தினர்.
அதில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்றி செயல்பட்டு வந்ததும் சாயக் கழிவுகளை காவியாற்றில் திறந்துவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளை நாமக்கல் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சுத்திகரிப்பு நிலையம் இன்றி சாயப்பட்டறைகளை இயக்கிவரும் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications