அரசியல் கட்சியினர் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசவேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேச வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை: அரசியல் கட்சிகள் மாணவர்களின் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் வார்த்தைகளை விடக் கூடாது என கோரிக்கை விடுக்கிறேன் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேச வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் மாணவர்களின் மன தைரியத்தை வீழ்த்தும் விதத்தில் செயல்படாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், அரியலூர் சென்று அனிதாவின் பெற்றோர்களை சந்திக்க உள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.